ஞாயிறு, அக்டோபர் 15, 2006

தேவையா தேர்தல்?

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றுமுடிந்தாலும் பெரும்பாலோர் மனதில் இத்தேர்தல் தேவையா என்ற கேள்வி எழும் வண்ணம் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது கவலை அளிக்கிறது.

சாதாரண பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு கூட பல பேர் போட்டியிடுவதும் எப்படியும் வெற்றிபெறவேண்டும் என்ற வெறியில் பணம் தண்ணீராய் செலவு செய்யப்படுவதும் ஜனநாயக நடவடிக்கையா?

கிராமத்து மக்களிடம் இருந்த ஒற்றுமையை அழிக்கும்,ஒரு தெருவில் உள்ள மக்களிடம் கூட விரோதத்தை வளர்க்கும் இத்தேர்தலினால் என்னபயன்?எதை எதிர்பார்த்து இத்தகைய பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பணத்தை வாரி இறைக்கின்றனர்?

இத்தகைய அமைப்புகளுக்கு அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதி 100 % நேர்மையான வழியில் நியாயமாக செலவு செய்யப்படுவது உறுதிசெய்யபடும் வகையில் அரசாங்கத்தின் நடவடிக்கை அமைந்துவிட்டால் அடுத்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை தேடிப்பிடிக்கும் நிலைக்கு அரசியல்கட்சிகள் தள்ளப்படுவது நிச்சயம்.