வியாழன், அக்டோபர் 23, 2014

மோடிஜி, நீங்கள் அடுத்து செல்லவேண்டிய இடம்?

மாண்புமிகு பிரதமர் மோடிஜி அவர்களே,
உண்மையில் ஒரு துடிப்பான, செயல்திறம்மிக்க , துணிச்சலான ஒரு பிரதமரான உங்களை காண்பதில்எங்களுக்கு மிக்க பெருமையாக உள்ளது.

வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வர புயலாக புறப்பட்டதும்,காஷ்மீரில் வெள்ள சேதங்களை பார்வையிட்டு எதிர்கட்சிகள் கூட வாயடைதது நிற்குமாறு அதிரடியாக நிவாரணம் அறிவித்ததும்,அதேபோல் ஆந்திர வெள்ளத்தை பார்வையிட்டு நிவாரணம் அறிவித்ததும் ,அதற்கும் மேல் காஷ்மீரில் வெள்ளதால் மக்கள் படும் துயரத்தை கண்டு உங்கள் பிறந்த நாளைக்கூட கொண்டாட மறுத்ததை கண்டும் , அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல் இன்று கூட கடினமான பனிப்பிரதேசமான சியாச்சின் சிகரம் விரைந்து மிக கடினமான சூழ்நிலையில் நம் எல்லையை காக்கும் வீரர்களோடு இணைந்து நின்று தீபாவளி வாழ்த்து தெரிவித்ததை அறிந்தும் மிக்க பெறுமை அடைகிறோம் மோடிஜி.

ஆனால்ஜெய் ஜவான், ஜெய் கிசான்என முழங்கிய  நீங்கள் நேற்று கூட மகாராஷ்டிர மாநிலம் விதர்பாவில் 6 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதை  அறியவில்லையா?சென்ற ஒரு வருடத்தில் சுமார்   3200 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள் என தெரிகிறது.என்னதான் பிரச்சினை விதர்பாவில்? முன்பு கூட செயல்படாத பிரதமரான மன்மோகன் அங்கே சென்று கதறிய விவசாயிகளை கண்டு ஒப்புக்காக ஒன்றுக்கும் உதவாத நிவாரணம் அளித்து தான் செயல்படும் பிரதமராக காட்டிகொண்டார்.எதுவும் அங்கே பயனளிக்கவில்லையே? என்ன காரணம்?

மோடிஜி உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.துடிப்புமிக்க பிரதமரான நீங்கள் சியாச்சின் சிகரத்திலிருந்து உடனே விதர்பா செல்லுங்கள் பிரதமர் அவர்களே,நாட்டை காக்கும் வீரர்களை வாழ்த்திய நீங்கள் இந்த நாட்டிற்க்கு உணவளிக்கும் விவசாயிகளை காக்க ,அவர்கள் பிரச்சினைகளை தீர்க்க உடன் விதர்பா செல்லவேண்டும் என்பதே என் ஆசை.

செவ்வாய், அக்டோபர் 21, 2014

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அன்புள்ள தமிழ்( மண ) உறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், அக்டோபர் 07, 2014

ஜாமீன் மறுப்பு-தற்போதய செய்தி

கர்னாடக உயர்நீதிமன்றம், மு.முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளதாகஅனைத்து செய்தி ஊடகங்களும் செய்தி வெளியிட்ட நிலையில் தற்போதய செய்திகளின்படி ஜாமீன் மறுக்கபட்டதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா- ஜாமீன்

கர்னாடக உயர்நீதிமன்றம், மு.முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளதாக தற்போதய தகவல்கள் தெரிவிக்கின்றன.