ஞாயிறு, நவம்பர் 30, 2014

கிரிக்கெட்-தேவையா?

பவுன்சர் என்ற எமன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியுஸ் உயிரை பறித்தது மிகவும் வருத்தப்படவைத்தது. பொதுவாகவே எனக்கு  கிரிக்கெட்டில் அனைவரையும் போல அதீத ஆர்வம் இருந்த தருணங்கள் தற்போது இல்லை.

எப்பொது கிரிக்கெட்டில் சூதாட்டமும் ஊழல்களும் ஆரம்பித்தனவோ அன்றிலிருந்தே அதன் மீதான ஆர்வம் குறைந்துவிட்டது. கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்கு மிக அதிக முக்கியத்துவம் தரப்படுவது அவசியமற்றது என்பதே என் கருத்து.

வீரர்களை அரங்கில் உற்சாகப்படுத்த  வெளிநாட்டு அழகிகளை இறக்குமதி செய்ய வேண்டிய அளவிற்கு செல்வது தேவையா?பொதுவாக விளையாட்டு விளையாட்டாகவே இருக்கவேண்டும்.அழகாக சுழலும் சுழல் பந்துவீச்சில் இருக்கும் நளினம் உயிரை பறிக்கும் வேகப்பந்து வீச்சில் உண்டா? தேவையெனில் வேகப்பந்து வீச்சை கிரிக்கெட்டில் தடை செய்வது கூட அவசியம் என்பதே என் கருத்து.