ஞாயிறு, ஆகஸ்ட் 03, 2014

பிரதமருக்கு நன்றியும்,வேண்டுதலும்.

முந்தைய விவசாய விரோதி பிரதமர் மன்மோகன், ஒப்புக்கொண்ட நமது விவசாயிகளை ஒழித்துக்கட்ட அமெரிக்கா நிறைவேற்ற துடிக்கும் உலக வர்த்தக ஏற்பாடு ஒப்பந்தத்தை அமெரிக்க எதிர்ப்பையும் மீறி துணிவுடன் தடுத்து நிறுத்தியமைக்கு நன்றி.
 
அதே சமயம் உங்கள் அரசு, மாநில அரசுகள் விவசாய விளைபொருளுக்கு கூடுதல் விலை வழங்க கூடாது என உத்தரவிட்டுள்ளதாக செய்தி.

மத்திய அரசு வழங்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை கட்டுப்படியானதல்ல என்பது ஊரரிந்த விஷயம். எனவே அனைத்து விவசாய விளைபொருளுக்குமான தற்போதய குறைந்தபட்ச ஆதரவு விலையை (நியாயமான விலை)இரு மடங்காக  உயர்த்தி நீங்கள் வழங்கினால்  மேற்படி உத்தரவு நியாயமே என விவசாயிகள் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளோம். 

ஜெய் ஜவான்,ஜெய் கிசான் என தேர்தலுக்கு முன் நீங்கள் முழங்கிய வார்த்தைகள் எங்கள் செவிகளில் இன்னமும் ஒலித்துகொண்டுள்ளது.அவ்வொலியின் உண்மையான உணர்வோடு உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.  

பல்வேறு இன்னல்கள் எதிர்கொண்டு,  விவசாயிகள் விளைவித்த கரும்பை பெற்றுகொண்ட ஆலைகள் அவற்றுக்கான விலையை வழங்காமல் விவசாயிகளை ஏமாற்றி வருவது நீங்கள் அறியாததல்ல.  விற்ற பொருளுக்கு விலை கேட்டு போராடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளது நியாயமா? நீங்கள் ஆட்சிக்கு வந்து நூறு நாட்கள் நெருங்க உள்ளது.அதற்குள்ளாவது விவசாயிகளின் இந்த நியாயமான கோரிக்கையை அதிரயடியாக நிறைவேற்றி தர பணிவுடன் வேண்டுகிறேன்.

கருத்துகள் இல்லை: