வியாழன், ஏப்ரல் 30, 2015

மூட்டைப்பூச்சியா - கொளுத்து வீட்டை

விவசாயிகளுக்கு வங்கிகளில் பல்வகை கடன்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.இதில் முக்கியமானவை நகைக்கடன், மற்றும் பயிர்க்கடன்.

இவற்றில் முதலில் 9% சத வட்டிவீதமாக நிர்ணயிக்கப்பட்டு பின் 2%சதம் அரசால் மானியமாகவும் பின்பு குறிப்பிட்ட காலத்திற்குள் ஒழுங்காக கடனை திருப்பிசெலுத்தும் விவசாயிகளுக்கு மேலும் 3% சத வட்டி அரசால் மானியமாக வழங்கப்பட்டு இறுதியில் 4% சத வட்டி வீதத்தில் விவசாயிகளுக்கு கடன் கொடுக்கப்பட்டுவருகிறது.

பிரச்சினையே இங்குதான் ஆரம்பம். வங்கிகள் தங்களுக்கு நிர்ணயிக்கபட்ட விவசாய கடன் இலக்கை அடைய பெரும்பாலும் நகைகடன் கொடுத்து அந்த இலக்கை அடையவும் , மேலும் விவசாயிகள் தவிர மற்றவர்களுக்கும் இந்தவகையில் கடன் அளித்து இலக்கை அடைவதாக விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு உள்ளது.மேலும் பல காரணங்களை காட்டி அரசாங்கம் அளிக்கும் வட்டி மானியத்தை விவசாயிகளுக்கு அளிக்காமல் எமாற்றி வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.இதனால் உண்மையான விவசாயிகளுக்கு கடனும், அரசின் பயனும் கிடைப்பதில்லை.

உண்மையான விவசாயிகளுக்கு தேவையான  கடன் தொகை,அரசாங்கம் அளிக்கும் வட்டிச்சலுகை விவசாயிகளுக்கு சரியாக சென்று சேர தேவையான நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு ரிசர்வ்வங்கி விவசாயிகளுக்கான கடன் வட்டியை 11% ஆக உயர்த்தி பிரச்சினையை முடிக்க நடவடிக்கை எடுப்பது மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தும்  (--------)செயலாக உள்ளது.

சனி, ஏப்ரல் 25, 2015

விவசாயிகளின் மதிப்பு

இன்று நாளிதழில் ஒரே பக்கத்தில் வெளியான இரு செய்திகளை பார்ப்போம்
.
செய்தி 1.கால்நடைகள் கடத்தல்-சுப்ரீம் கோர்ட் கவலை.

இந்தியாவிலிருந்து அதிக அளவில் கால்நடைகள் வங்கதேசத்திற்கு கடத்தபடுகின்றன.உணவு தண்ணீர் கொடுக்காமல் பல கி.மீ தூரம் நடத்திசெல்லப்படுகிறது. அதை தடுக்கவேண்டும்.இதனால் இந்தியாவில் கால்நடை எண்ணிக்கை குறையும். குழந்தைகளுக்கு பால் கிடைக்காது எனவே இதை தடுக்கவேண்டும் என தொடரப்பட்ட வழக்கில்சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்தது.

செய்தி 2. மகாராஷ்டிராவில் 3 மாதங்களில் 257 விவசாயிகள் தற்கொலை.

மத்திய அமைச்சர் ராஜ்யசபாவில் பேசும் போது விவசாயிகள் தற்கொலைகள் அதிகரிப்பது கவலை அளிப்பதாகவும் இவ்வருடத்தின் முதல் 3 மாதங்களில் மட்டும் மகாராஷ்டிராவில் 3 மாதங்களில் 257 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் எனவும் விவசாயிகள் தொடர்பான விவகாரம் மாநில அரசுகள் சம்பந்தபட்டது என்றும் அந்த அரசுகள் வழங்கும் இழப்பீட்டில் மத்திய அரசு தலையிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.


அரசோ,அதிகார வர்க்கமோ ,நீதிமன்றங்களோ கூட விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லை. கால்நடைகளுக்கு கிடைக்கும் நீதி கூட விவசாயிகளுக்கு கிடையாது.என்ன செய்வது தற்கொலையை தவிர?

வியாழன், ஏப்ரல் 23, 2015

இதுதான் எனது இன்றைய இந்தியா

நேற்று  இந்திய தலைநகர் டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக மத்திய அரசின் நிலம் கையகபடுத்தும் சட்டத்திற்கு எதிரான பேரணியில் பங்கற்ற விவசாயி ஒருவர் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் மரத்தில் ஏறி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது மிக்க அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
இதுதான் இந்தியாவில் உள்ள விவசாயிகளின் வேதனையான நிலைமை.

உண்மையான காரணத்தை ஆராயாது இதை எப்படி தங்களுக்கு சாதக பாதகமாக பயன்படுத்திகொள்வது என்பதுதான் அரசியல் கட்சிகளின் தற்போதய சிந்தனையாக உள்ளது.
உண்மையில் விவசாயிகள் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த மோடி அரசு இதுவரை விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு அடியை கூட எடுத்து வைக்கவில்லைஎன்பதுதான்அப்பட்டமானஉண்மை.
ஆனால்விவசாயிகளுக்கு எதிராக நிலம் எடுப்பு சட்டம்,விவசாய கடனுக்கான வட்டியை இருமடங்கு ஆக்குவது,போன்ற விவசாயிகளுக்கு எதிரான செயல்களின் ஈடுபட்டு வருகிறது வேதனையாக உள்ளது.

திங்கள், ஏப்ரல் 20, 2015

பிரதமருக்கு ஒரு வேண்டுகோள்

மாண்புமிகு பாரத பிரதமருக்கு ஒரு பணிவான வேண்டுகோள்.

  இந்திய நாடு வளர்ச்சியடைய பாடுபடும் பிரதமருக்கு என் உளம்கனிந்த வாழ்த்துகள். நாடு வளர்ச்சியடைய தொழில்வளம் பெருக வேண்டியது மிக்க அவசியம். இதற்கு தேவையான நிலம் தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதும் மறுப்பதற்கில்லை. ஆனால் அதே நேரம் ஒரு விவசாய நாட்டில் விவசாயதொழிலும் பெருகவேண்டியது தேவையல்லவா?

 நம் நாட்டில் கல்வி கற்க தேவையான பள்ளிக்கூடம், மருத்துவமனை  போன்ற பொதுபயன்பாட்டிற்கு தேவையான நிலத்தை அவ்வூரில் உள்ள பெரியோர்கள் மனம் உகந்து  தன்னிடம் உள்ள நிலத்தில் ஒரு பகுதியை இலவசமாக அரசுக்கு அளிக்கும் மனோபாவம் கொண்டிருந்தது பெருமைக்குரியது.

 அத்தகைய பெருமைக்குரியவர்களாகிய விவசாய சமுதாயத்திடம் இருந்து தொழில் துவக்க நிலத்தை அதிரடி அவசர சட்டம் போட்டாவது பிடுங்க நினைப்பதுதான் வேதனை தருகிறது.

தொழில்வளம்பெருகினால்பலருக்குவேலைவாய்ப்புகிடைக்கும்,பொருளாதாரம் வளரும் என்பது அனைவரும் அறிந்ததே.
விவசாயம் வளர வழி உள்ளதா என்பதே என் கேள்வி
.உங்களிடம் உள்ள அதிகார பலத்தின் மூலம் அச் சட்டம் நிறைவேறுமாயினும் கவலையில்லை.ஆனால் உங்களிடம் ஒரு வேண்டுகோள் அப்படி கையகபடுத்தும் நிலத்தில் 50% விழுக்காடு விவசாயம் சார்ந்த தொழிற்சாலைக்குதான் ஒதுக்கப்படவேண்டும் என்பதே என் அன்பு வேண்டுகோள்.

புதிய அவதாரம்

விவசாயிகளின் ஆபத்பாந்தவராக ராகுல்காந்தி புதிய அவதாரம் எடுத்து நிலம் கையகபடுத்தும் மசோதாவை எதிர்த்து இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தில்பேசும்போது இன்றைய பி. ஜே. பி அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

 கட்கரி விவசாயிகளிடம் அரசையும் கடவுளையும் நம்பவேண்டாம் என கூறியது.இன்றைய ஆட்சியில் விவசாய வளர்ச்சி குறைந்தது,   பிரதமர் மோடி விவசாயிகளை நம்பவைத்து ஏமாற்றிவருவது,  விவசாய விளைபொருளுக்கு விலையை அதிகபடுத்தி வழங்காதது,  விவசாயிகளுக்கு கடன் தொகை வெறும் 5% மட்டும்  பட்ஜெட்டில் கூடுதலாக்கியது,  மோடி அரசு விவசாயிகளுக்கு எதிரானது தொழிலதிபர்களுக்கு ஆதரவானது  என்பது போன்ற பல விஷயங்களை தனது பேச்சில் குறிப்பிட்டார்.

இன்றைய அரசை எதிர்த்து அவர் விவசாயிகளுக்காக பேசியது அனைத்தும் மிக்க பொருத்தமானதே.ஆனால் காலம் கடந்த ஞானோதயத்தால் பயனில்லையே ராகுல்ஜி.உங்களின் பிரதமர் மன்மோகன் விவசாயிகளை வேறு வேலை பார்த்துகொள்ளுங்கள் என்று சொன்னபோது இதையெல்லாம் நீங்கள் பேசியிருந்தால் ஏதாவது பயன் கிட்டியிருக்கும்.

நிலம் கையகபடுத்தும் மசோதாவை எப்படியாவது நிறைவேற்றத்துடிப்பதின் மூலம் பிரதமர்மோடி அவரை அறியாமலேயே எதிர்கட்சிகளுக்கு அரசியல் செய்வதற்கு ஒரு அருமையான வழியை உருவாக்கிதந்துவிட்டார்.
இன்றைக்கு விவசாயிகளுக்கு ஆதரவாக பேசும் ராகுலின் காங்கிரஸ் ஆட்சியில்தான் நிலம் கையகபடுத்தும் மசோதாவே கொண்டுவரப்பட்டது என்பதை விவசாயிகள் மறந்துவிட மாட்டார்கள்.

விவசாயிகளிடம் உள்ள ஓட்டு வங்கிதான் பறிகொடுத்துவிட்ட அரசை கைப்பற்ற ஒரே ஆயுதம் என்பதுதான் நீண்ட விடுமுறையில் ராகுலுக்கு கிட்டிய ஞானோதயம் என்பதே என் கருத்து.
இந்த ஞானோதயம் மோடிக்கு கிட்டுமா என்பதே என் கேள்வி?

ஞாயிறு, ஏப்ரல் 12, 2015

பணக்காரர்களிடம் மன்றாடல் - ஏழைகளிடம் அதிரடி-- மோடிபாணி

இது நியாயமா ,மோடி ஜீ -
வசதி படைத்த பணக்காரர்களிடம் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுத்தருமாறு மன்றாடி கெஞ்சும் நீங்கள் ஏழை விவசாயிகளிடம் உள்ள நிலத்தை பிடுங்குவதில் மட்டும் அதிரடியாக செயல்படுவது என்ன நியாயம்?

 நிலம் கையகபடுத்தும் சட்டம் விவசாயிகளுக்கு நன்மையானது என மேடை தோறும் பேசும் நீங்கள் என்ன நன்மை என எதையுமே தெரிவிக்காமல் வெறுமனே கூப்பாடு  போடுவதால் பயனில்லையே.

உண்மையில் எனக்கு நிச்சயம் நல்ல பயன் கிடைக்கும் என்றால் எனக்கு சொந்தமான நிலத்தை தாராளமாக அரசுக்கு அளிக்க தயாராகவே உள்ளேன்.எடுத்து கொள்ளுங்களேன்.

இந்த ஒரு விஷயமே போதுமே மோடி ஜீ   விவசாயத்தை அறியாது
’ டீ’  வியாபாரம் செய்த அனுபவம் கொண்ட  நீங்கள் விவசாயிகளுக்கு எதிரானவர்தான் என்பதற்கு.

சனி, ஏப்ரல் 11, 2015

நிதின் கட்கரி-செய்தி

சமீபத்தில் ஒருசெய்தி-
 விவசாயிகள் கலந்து கொண்ட ஒரு கூட்டதில் மாண்புமிகு மத்திய அமைச்சர் நிதின்கட்கரி பேசும்போது  விவசாயிகள் அரசையோ , கடவுளையோ நம்பும் மனநிலையை மாற்றிக்கொள்ளவேண்டும் என பேசியதாக செய்தி.

 கட்கரி-ஜிக்கு ஒரு அன்பான எச்சரிக்கை.விவசாயிகள் அரசாங்கத்தை  நம்பவேண்டாம் என நீங்கள் குறிப்பிட்டது மிக்க பொருத்தம் தான்.ஏனெனில் ’ஜெய்கிசான்’என தேர்தல் நேரத்தில் மேடை தோறும் முழங்கி விவசாயிகளின் ஓட்டை பெற்று ஆட்சிக்கு வந்த நீங்கள் விவசாயிகள் வலி என்ன? பிரச்னைகள் என்ன என ஆராய நேரமில்லாமல் வெளிநாட்டுக்கு பறந்து கொண்டுள்ள பிரதமரை பார்த்தும்,  விவசாய விளைபொருளுக்கு 50% கூடுதல் விலை நிர்ணயிப்போம் என வாக்குறுதி கொடுத்துவிட்டு இது தொடர்பான வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றத்தில் அவ்வாறு அளிக்க இயலாது என சொல்லி விவசாயிகளை ஏமாற்றியும்,யாருக்கோ அடிபணிந்து எப்பாடு பட்டாவது நிலம்கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற துடிக்கும்  உங்களை பற்றி மிக்க பொருத்தமாய்தான் தெரிவித்துள்ளீர்கள் கட்கரிஜி.

ஆனால் உங்களோடு சேர்ந்து கடவுளையும் நம்பவேண்டாம் என தெரிவித்து கடவுளை உங்களோடு ஒப்பிட்டுக்கொண்டதுதான் மிக்க வேதனையாய் உள்ளது .கடவுளாலும் விவசாயிகளை காப்பாற்றமுடியாது என்று சொல்ல வருகிறீர்களா கட்கரிஜி.உங்களுக்கு ஓட்டுப் போட்ட மக்களை நினைத்து வேதனையாய் உள்ளது.
ஒன்று மட்டும் நிச்சயம் இன்னும் நான்கு ஆண்டுகள் கழித்து வர உள்ள தேர்தலின் போது வாக்காளர்களான எங்களையும், கடவுளையும் நம்பும் மன நிலையை மாற்றிக்கொண்டு ஏற்படபோகும் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை இப்பொழுதிருந்தே வளர்த்துகொள்ளுங்கள் கட்கரிஜி.