திங்கள், ஏப்ரல் 20, 2015

பிரதமருக்கு ஒரு வேண்டுகோள்

மாண்புமிகு பாரத பிரதமருக்கு ஒரு பணிவான வேண்டுகோள்.

  இந்திய நாடு வளர்ச்சியடைய பாடுபடும் பிரதமருக்கு என் உளம்கனிந்த வாழ்த்துகள். நாடு வளர்ச்சியடைய தொழில்வளம் பெருக வேண்டியது மிக்க அவசியம். இதற்கு தேவையான நிலம் தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதும் மறுப்பதற்கில்லை. ஆனால் அதே நேரம் ஒரு விவசாய நாட்டில் விவசாயதொழிலும் பெருகவேண்டியது தேவையல்லவா?

 நம் நாட்டில் கல்வி கற்க தேவையான பள்ளிக்கூடம், மருத்துவமனை  போன்ற பொதுபயன்பாட்டிற்கு தேவையான நிலத்தை அவ்வூரில் உள்ள பெரியோர்கள் மனம் உகந்து  தன்னிடம் உள்ள நிலத்தில் ஒரு பகுதியை இலவசமாக அரசுக்கு அளிக்கும் மனோபாவம் கொண்டிருந்தது பெருமைக்குரியது.

 அத்தகைய பெருமைக்குரியவர்களாகிய விவசாய சமுதாயத்திடம் இருந்து தொழில் துவக்க நிலத்தை அதிரடி அவசர சட்டம் போட்டாவது பிடுங்க நினைப்பதுதான் வேதனை தருகிறது.

தொழில்வளம்பெருகினால்பலருக்குவேலைவாய்ப்புகிடைக்கும்,பொருளாதாரம் வளரும் என்பது அனைவரும் அறிந்ததே.
விவசாயம் வளர வழி உள்ளதா என்பதே என் கேள்வி
.உங்களிடம் உள்ள அதிகார பலத்தின் மூலம் அச் சட்டம் நிறைவேறுமாயினும் கவலையில்லை.ஆனால் உங்களிடம் ஒரு வேண்டுகோள் அப்படி கையகபடுத்தும் நிலத்தில் 50% விழுக்காடு விவசாயம் சார்ந்த தொழிற்சாலைக்குதான் ஒதுக்கப்படவேண்டும் என்பதே என் அன்பு வேண்டுகோள்.

கருத்துகள் இல்லை: