திங்கள், ஏப்ரல் 20, 2015

புதிய அவதாரம்

விவசாயிகளின் ஆபத்பாந்தவராக ராகுல்காந்தி புதிய அவதாரம் எடுத்து நிலம் கையகபடுத்தும் மசோதாவை எதிர்த்து இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தில்பேசும்போது இன்றைய பி. ஜே. பி அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

 கட்கரி விவசாயிகளிடம் அரசையும் கடவுளையும் நம்பவேண்டாம் என கூறியது.இன்றைய ஆட்சியில் விவசாய வளர்ச்சி குறைந்தது,   பிரதமர் மோடி விவசாயிகளை நம்பவைத்து ஏமாற்றிவருவது,  விவசாய விளைபொருளுக்கு விலையை அதிகபடுத்தி வழங்காதது,  விவசாயிகளுக்கு கடன் தொகை வெறும் 5% மட்டும்  பட்ஜெட்டில் கூடுதலாக்கியது,  மோடி அரசு விவசாயிகளுக்கு எதிரானது தொழிலதிபர்களுக்கு ஆதரவானது  என்பது போன்ற பல விஷயங்களை தனது பேச்சில் குறிப்பிட்டார்.

இன்றைய அரசை எதிர்த்து அவர் விவசாயிகளுக்காக பேசியது அனைத்தும் மிக்க பொருத்தமானதே.ஆனால் காலம் கடந்த ஞானோதயத்தால் பயனில்லையே ராகுல்ஜி.உங்களின் பிரதமர் மன்மோகன் விவசாயிகளை வேறு வேலை பார்த்துகொள்ளுங்கள் என்று சொன்னபோது இதையெல்லாம் நீங்கள் பேசியிருந்தால் ஏதாவது பயன் கிட்டியிருக்கும்.

நிலம் கையகபடுத்தும் மசோதாவை எப்படியாவது நிறைவேற்றத்துடிப்பதின் மூலம் பிரதமர்மோடி அவரை அறியாமலேயே எதிர்கட்சிகளுக்கு அரசியல் செய்வதற்கு ஒரு அருமையான வழியை உருவாக்கிதந்துவிட்டார்.
இன்றைக்கு விவசாயிகளுக்கு ஆதரவாக பேசும் ராகுலின் காங்கிரஸ் ஆட்சியில்தான் நிலம் கையகபடுத்தும் மசோதாவே கொண்டுவரப்பட்டது என்பதை விவசாயிகள் மறந்துவிட மாட்டார்கள்.

விவசாயிகளிடம் உள்ள ஓட்டு வங்கிதான் பறிகொடுத்துவிட்ட அரசை கைப்பற்ற ஒரே ஆயுதம் என்பதுதான் நீண்ட விடுமுறையில் ராகுலுக்கு கிட்டிய ஞானோதயம் என்பதே என் கருத்து.
இந்த ஞானோதயம் மோடிக்கு கிட்டுமா என்பதே என் கேள்வி?

கருத்துகள் இல்லை: