செவ்வாய், ஜூலை 16, 2013

”அம்மா”வுக்கு நன்றி

ஒரு மகிழ்வான தருணம்.   ஆம் எங்கள் பகுதியில் கிட்டதட்ட பல வருடங்களாக நீடித்த மின் தடை பிரச்சினையால் விவசாயிகள் பெரும் இன்னல்களை சந்திக்க நேர்ந்தது.கிட்டதட்ட ஒரு நாளில் வெறும் 3 மணிநேர   மும்முனை மின்இணைப்பு மட்டும் கிடைத்த அந்த நாட்கள் விவசாயிகளின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாட்கள்.ஆனால் இன்று நிலைமை முற்றிலும் மாறி உள்ளது. கிட்டதட்ட ஒரு மாதமாக எங்கள் பகுதியில் (பண்ருட்டி) (அரிதாக எப்பொழுதாவது சில நேரங்களில் ஏற்படும்
சிறிய அளவிலான மின் தடை தவிர) 24 மணிநேரமும் மின்சாரம் கிடைத்து வருகிறது.குறிப்பாக பெரும்பான்மையான நேரம் மும்முனை மின்சாரம் கிடைக்கிறது.  என் வாழ்நாளில் கிராமத்தில்,விவசாயிகளுக்கு இவ்வாறு மின்சாரம் கிடைப்பதை தற்போதுதான் பார்க்கிறேன்.அனைத்து தரப்பு மக்களையும் மிகவும் பாதித்த மின் தடை அடியோடு மாறிய் நிலைமை அனைவரையும் நிச்சயம் மகிழ்சியடைய செய்திருக்கிறது. எப்படி சாத்தியமானது? தமிழக முதல்வரின் பெரும் முயற்சியினால் இது சாத்தியமாகியுள்ளது.மக்களை பெரும் இன்னலுக்கு ஆளாக்கிய மின் தடையை தனது திறமையினால் நீக்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு விவசாயிகளின் சார்பில் இதயம் கனிந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

கருத்துகள் இல்லை: