புதன், ஜனவரி 03, 2007

பாதுகாப்பு?

சென்ற வாரத்தில் ஒரு நாள் காலை தங்களின் நிலத்துக்கு சென்ற விவசாயிகள் பலருக்கு சோகமான அனுபவம் கிட்டியது.தங்கள் மின் மோட்டாருக்கு மின்சார இணைப்பு வழங்க பயன்படுத்திய காப்பர் ஒயர் (சுமார் ரூ1500 பெறுமானமுள்ளது )திருடர்களால் களவாடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றனர்.சுமார் பத்து விவசாயிகளின் மின் இணைப்பு ஒயர்கள் ஒரே நாளில் இவ்வாறு களவாடப்பட்டிருந்தன.

பல கிராமங்களில் இவ்வாறான திருட்டு நடைபெறுவதை பத்திரிக்கைகளில் காண்கிறேன்.நானும் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் தருமாறு கேட்டுக்கொண்டாலும் விவசாயிகள் யாரும் இதை விரும்பாததுதான் இன்றைய நிலை.

இவ்வாறு இழப்புக்குள்ளான விவசாயிகள் தற்போது சற்றே விலை குறைவான அலுமினிய ஒயரை புதிதாக வாங்கி மாற்றியுள்ளார்கள்.இதில் கவலைப்படும் அம்சம் என்னவெனில் புதிய ஒயரை வாங்க பணமில்லாது கடன் பெற்று வாங்கிய ஒயருடன் தனது மிதிவண்டியில் இன்று சென்ற 70 வயது முதிய விவசாயியை கண்டதுதான் இப்பதிவு.

பொழுது போக்கு அம்சமான திரைப்படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு இழப்பு வரக்கூடாது என்பதற்காக திருட்டு விசிடி யை ஒழிக்க காவல்துறையில் தனிப்படை.அதற்கும் மேல் குண்டர்சட்டம் போன்ற பாதுகாப்பு . விவசாயிகளுக்கு?

கருத்துகள் இல்லை: