செவ்வாய், ஜனவரி 16, 2007

மாட்டுப்பொங்கல்

இன்று மாட்டுப்பொங்கல்.முன்பெல்லாம் உழவு மாடுகளும்,வண்டிமாடுகளும்,கறவை மாடுகளும் இல்லாத விவசாயின் வீட்டை காணமுடியாது.எங்கள் வீட்டிலும் 10 பசுமாடுகளும் ஒவ்வொரு ஜதை உழவு மற்றும் வண்டி(டயர் வண்டி)மாடுகளும்,சுமார் 25 எருமை மாடுகளும் நிறைந்திருந்தன.

மாட்டுப்பொங்கலுக்கு ஒரு வாரம் முன்பிருந்தே ஊரே களை கட்டிவிடும்.டயர் வண்டிக்கு வண்ணம் தீட்டுவதில் தொடங்கி,மாடுகளுக்கு கொம்பு சீவி,புது கயிறு கட்டி,சலங்கை கட்டி,மாடுகளை அழகுபடுத்துவதே ஒரு கலையாகிவிடும்.

இன்றைய நாளில் அனைவரின் வண்டிகளும் சிறுவர் சிறுமியர் புடைசூழ மந்தைவெளிக்கு புறப்பட்டு சென்று சாமி கும்பிட்டபின் ஊர்வலம் வரும்.எந்த வண்டி சீக்கிரம் வரும் என்பதில் போட்டியும் நிலவும்.

இன்று வண்டியும்,வண்டிமாடுகளூம்,உழவு மாடுகளும் ,கறவை மாடுகளும் உள்ள விவசாயிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

இன்றைக்கும் இந்த விழா நடைபெற்றாலும் வண்டியும் வண்டிமாடுகளும்,உழவுமாடுகளும்,கறவைமாடுகளும் நிறைந்து இயற்கையோடு இணைந்து பயிரிட்டதால் விவசாயியின் மனமும் நிறைந்து மகிழ்ச்சியும் நிறைந்திருந்த சூழல் இன்று இல்லையென்பதே உண்மை.

கருத்துகள் இல்லை: