ஞாயிறு, ஜனவரி 18, 2015

மாதங்களில் நான் ”மார்கழி”-2

அன்றைய பஜனையில் மிருதங்கம் ,ஹார்மோனியம், சிப்லாகட்டை,ஜால்ரா போன்ற  இசை கருவிகள் இசைக்கப்பட்டு  இனிமையாக இருந்தது

.சில வருடங்களுக்கு முன்பு வரை பயன்படுத்தப்பட்டுவந்த இக்கருவிகள் கால மாற்றங்களால் பயன்படுத்தமுடியாமல் வீணாகி மறைந்து விட்டதுபோல் அதனை இசைக்க தெரிந்த   பல பெரியோர்கள் தற்போது  மறைந்து விட்டாலும் ,எஞ்சிய ஜால்ராவை வைத்து மட்டும் கிராமத்து இளம் சிறுவர்கள் இன்றும் அதிகாலை 3-4 மணிக்கே எழுந்து இந்த இனிய பக்தி பரவசத்தில் உற்சாகம் கொண்டு கலந்து கொண்டு வருவது ஆச்சரியமானதே.

இந்த ஆண்டும் இந்த மார்கழி பஜனை ஊர்வலம் உண்டா என மார்கழி மாதம் துவங்குவதற்கு முன்பே சிறுவர்கள் அதீத உற்சாகத்துடன் என்னிடம் கேட்டபோது  ‘கண்ணன்” திரு உள்ளம்  எதுவோ அதுவே நடக்கும் என மனதிற்க்குள் நினைத்து கொண்டு ஏதும் சொல்லாமலே விட்டுவிட்டேன்.
சிறுவர்கள் அவ்வாறு கேட்டதற்கு காரணம்?

தொடரும்.

கருத்துகள் இல்லை: