ஞாயிறு, ஜனவரி 18, 2015

மாதங்களில் நான் ”மார்கழி”-1

மார்கழி மாத அதிகாலைபொழுது அளிக்கும் இனிமையும், உற்சாகமும் என்றென்றும் மறக்கமுடியாதவை. எங்கள் கிராமத்தில் அந்த அதிகாலைபொழுதை இனிய எளிய பஜனையுடன் அனுபவிக்க ஆர்வமுடன் பனிவிழும் அதிகாலையில் எழுந்து சிறு வயதான எங்களுக்கு குளிப்பதற்க்கு  வென்னீர் வைத்து அன்புடன் எழுப்பி கோயிலுக்கு செல்ல தயாராக்கி விட்ட எங்கள் தாயார் மறைந்து விட்டாலும் இன்றும்  அந்த இனிய நினைவுகள் மறக்க முடியாதவையே.
கிட்டதட்ட 75 ஆண்டுகளாக இந்த  எளிய பஜனை ஊர்வலம் நடைபெற்று வருகிறது.உற்சாகம் துள்ளும் சிறுவர் சிறுமியர்கள் மட்டுமின்றி பல பெரியோர்களும் தங்கள் வயது மறந்து ஆடிப்பாடிஉண்மையான பக்தி பரவசத்தில் மெய்மறந்த அந்த நினைவுகள் இன்றும் பசுமையாகவே உள்ளது.

ஆனால் அத்தகைய பல பெரியோர்கள் மறைந்து விட்டதனால் அத்தகைய உற்சாகபக்தி பரவசம் மெல்ல மெல்ல குறைந்து வருவதும் இயற்கையே. அத்தகைய சூழலில் இந்த ஆண்டும் பாரம்பரியம் மிக்க இத்தகைய பக்தி நிகழ்வுகள் நடைபெறுமா என்ற கேள்வியும் இருந்தது.

தொடரும்


கருத்துகள் இல்லை: