வியாழன், ஜனவரி 22, 2015

சேவை வரி -மீண்டும் ஒரு பூதம்.

ஏற்கெனவே சேவை வரி பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதன் பின் என்ன காரணமோ கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீட்டிற்க்கு அந்த சேவை வரி விலக்கிகொள்ளபட்டிருந்தது. இப்பொழுது மீண்டும் இரு மடங்காக சேவை வரி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.

  ஏழைகள், இயலாதோர், போன்றவர்களுக்கு அவர்களின் துன்பங்களை, கஷ்டங்களை  தன்னால் முடிந்தவரை குறைப்பதற்க்கான செயலை செய்வதுதான் ஒரு நல்ல அரசாங்கத்தின் கடமை.அவ்வாறு செய்யாமல் அதை அதிகப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவது முட்டாள்தனமானது.

 நம்பிக்கைமிக்க ஒரு மத்திய அரசாங்கத்தின் அங்கமாக கிராமங்களில் கூட செயல்பட்டுவரும் அஞ்சலகத்தில் ஏதோ ஒரு நம்பிக்கையில் வாயை கட்டி வயிற்றை கட்டி தான் சேமிக்கும் மாதம் 50 - 100  ரூபாய்க்கும்ஏழைகளிடம் 2% வரி விதித்துதான் உங்கள் அரசாங்கத்தை நடத்த வேண்டும் என்றால் வெட்ககேடான விஷயம் வேறேதுமில்லை மோடிஜி.

கருத்துகள் இல்லை: