ஞாயிறு, ஜூன் 17, 2007

கசக்கும் கரும்பு

அனைவருக்கும் இனிக்கும் கரும்பு விவசாயிகளை பொறுத்தவரை இவ்வருடம் கசக்கவே செய்கிறது.பருத்திக்கு பிறகு விவசாயிகளை வாட்டும் கரும்பு பயிர்.ஆம் பருத்தி பயிரிட்டு நஷ்டம் அடைந்து தற்கொலைசெய்துகொள்ளும் விவசாயிகளின் வரிசையில் கரும்பு பயிரும் அத்தகைய நிலைக்கு விவசாயிகளை தள்ளிவிடும், தள்ளிவிட்ட பரிதாபம் தொடர்கதையாகிறது.

மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்னாடகா,இன்னும் தமிழகத்திலும் இவ்வருடம் கரும்பு பயிரிட்ட விவசாயிகளின் நிலை இதுதான்.என்ன காரணம்? மற்ற பயிர்களை விட நிலையான வருமானம் வரும் என நம்பி பெரும்பான்மையான விவசாயிகள் நாடு முழுவதும் கரும்பு பயிரிட்டதில் அனைத்தையும் அறவை செய்யும் திறனற்ற ஆலைகள் 12 மாதத்தில் அறுவடை செய்யவேண்டிய கரும்பிற்கு 15,16 மாதங்களில் அனைத்தும் காய்ந்துவிட்ட பின் உத்தரவு வழங்கும் நிலை.

சென்ற வருடத்தைவிட ஆட்கள் பற்றாகுறை, கூலியோ 200%முதல்300% வரை சென்ற வருடத்தைவிட உயர்வு.வேறு வழியற்று கரும்பை தீயிட்டு அழிக்கும் அவலம்.இதுதான் இன்றைய கரும்பு விவசாயிகளின் நிலை.

சரி,இத்தகைய அவல நிலைக்கு தீர்வு காண அரசோ, அரசியல் கட்சிகளோ ஏதாவது செய்தார்களா?ஒரு வருட கால அவகாசம் உள்ள ஒரு விவசாய விளைபொருள் நாட்டில் எவ்வளவு பரப்பளவில் பயிரிடபட்டுள்ளது? சராசரி எதிர்பார்க்கும் உற்பத்தி எவ்வளவு?நாட்டில் உள்ள சர்க்கரை ஆலைகளின் அறவைத்திறன் எவ்வளவு?விவசாயிக்கு நட்டம் வராத வகையில் அறவை நடக்க என்ன செய்யலாம்?என்ன செய்தது அரசு?இன்றைய கணினி யுகத்தில் மேற்கண்ட கேள்விகளுக்கு பதிலை திரட்டி தக்க நடவடிக்கை எடுக்கமுடியாதா?முடியாதெனில் நாடு கணினி மயமாவதில் பயன் தான் என்ன? விவசாயி மீது யாருக்கும் அக்கறை இல்லையென்பதை தவிர வேறென்ன சொல்ல?