புதன், ஜூலை 17, 2013

என் கேள்விக்கு என்ன பதில்?

சுமார் பத்து ஆண்டுகால நிகழ்வுகளை ஒப்பிட்டு பார்க்கும்போது இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி பிரம்மாண்டமாய் உள்ளது.உலகம் உங்கள் கையில்,உலகம் சுருங்கிவிட்டது என்றெல்லாம் இவ் வளர்ச்சிபற்றி பேசப்படுகிறது.ஒருசில வினாடிகளில் உலகின் எந்த பகுதியையும் தொடர்பு கொள்ளலாம் என்பது நனவாகியுள்ளது.(ராஜிவ்காந்திக்கு நன்றி).மேலும் இந்தியாவில் உலக தரத்திலான சாலைவசதிஏற்படுத்த பட்டுள்ளது.கிராம சாலைகள் எல்லாம் சிமெண்ட் சாலைகளாக மாற்றபட்டுள்ளன. (வாஜ்பாய்க்கு நன்றி).ஆக தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும்,அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.இதனால் எந்த இடத்தையும் எந்த நபரையும் தொடர்பு கொள்வது மிக எளிதாகிவிட்டது.ஆனால் இவற்றின் தாக்கங்கள் ஏன் மற்ற துறைகளின் மீது மாற்றங்களை ஏற்படுத்தவில்லை என்பதே என் கேள்வி.குறிப்பாக என் மனதில் நீண்டநாட்களாக உள்ள கேள்வி என்னவென்றால் இவ்வளவு வளர்ச்சிகள் ஏற்பட்டபோதும் ஏன் தற்போது உள்ள எம்.பி மற்றும் எம்.எல்.ஏ - போன்ற மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை பாதியாக குறைக்ககூடாது? இல்லையெனில்  இவ்வாறான வளர்ச்சியின் உண்மையான பயன்தான் என்ன?

செவ்வாய், ஜூலை 16, 2013

”அம்மா”வுக்கு நன்றி

ஒரு மகிழ்வான தருணம்.   ஆம் எங்கள் பகுதியில் கிட்டதட்ட பல வருடங்களாக நீடித்த மின் தடை பிரச்சினையால் விவசாயிகள் பெரும் இன்னல்களை சந்திக்க நேர்ந்தது.கிட்டதட்ட ஒரு நாளில் வெறும் 3 மணிநேர   மும்முனை மின்இணைப்பு மட்டும் கிடைத்த அந்த நாட்கள் விவசாயிகளின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாட்கள்.ஆனால் இன்று நிலைமை முற்றிலும் மாறி உள்ளது. கிட்டதட்ட ஒரு மாதமாக எங்கள் பகுதியில் (பண்ருட்டி) (அரிதாக எப்பொழுதாவது சில நேரங்களில் ஏற்படும்
சிறிய அளவிலான மின் தடை தவிர) 24 மணிநேரமும் மின்சாரம் கிடைத்து வருகிறது.குறிப்பாக பெரும்பான்மையான நேரம் மும்முனை மின்சாரம் கிடைக்கிறது.  என் வாழ்நாளில் கிராமத்தில்,விவசாயிகளுக்கு இவ்வாறு மின்சாரம் கிடைப்பதை தற்போதுதான் பார்க்கிறேன்.அனைத்து தரப்பு மக்களையும் மிகவும் பாதித்த மின் தடை அடியோடு மாறிய் நிலைமை அனைவரையும் நிச்சயம் மகிழ்சியடைய செய்திருக்கிறது. எப்படி சாத்தியமானது? தமிழக முதல்வரின் பெரும் முயற்சியினால் இது சாத்தியமாகியுள்ளது.மக்களை பெரும் இன்னலுக்கு ஆளாக்கிய மின் தடையை தனது திறமையினால் நீக்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு விவசாயிகளின் சார்பில் இதயம் கனிந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

ஞாயிறு, ஜூலை 14, 2013

விவசாயிகளுக்கு மன்மோகனின் சூப்பர் அறிவுரை

    மாண்புமிகு பிரதமரின் அறிவுரை.  விவசாயம் செய்வது சிரமமாக இருந்தால் விவசாயிகள் வேறு தொழிலை பார்ப்பது நல்லது. -செய்தி

.ஆறு மாதத்திற்கு ஒரு   மந்திரி பதவி  இழந்தாலும் கோடிகோடியாய் ஊழலில் சிக்குபவர்களின் பட்டியல் தொடர்கதையாகவே உள்ளது  மந்திரிகளின் தலைவர் மன்மோகன் சிங்  நிர்வாகத்தில்.
விவசாயிகளை வேறு வேலைக்கு அனுப்பிவிட்டு இறக்குமதி செய்ய துடிக்கும்அதிபொருளாதார மேதாவி,அமெரிக்க படிப்பாளி பிரதமர் அவர்களே, முதலில் நல்ல பிரதமராக செயல்படுவது உங்களுக்கு சிரமமாக இருந்தால் தயவு செய்து வேறு தொழிலை பார்த்துக்கொள்ளுங்கள் அதுவே அனைவருக்கும் நல்லது.