ஞாயிறு, நவம்பர் 30, 2014

கிரிக்கெட்-தேவையா?

பவுன்சர் என்ற எமன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியுஸ் உயிரை பறித்தது மிகவும் வருத்தப்படவைத்தது. பொதுவாகவே எனக்கு  கிரிக்கெட்டில் அனைவரையும் போல அதீத ஆர்வம் இருந்த தருணங்கள் தற்போது இல்லை.

எப்பொது கிரிக்கெட்டில் சூதாட்டமும் ஊழல்களும் ஆரம்பித்தனவோ அன்றிலிருந்தே அதன் மீதான ஆர்வம் குறைந்துவிட்டது. கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்கு மிக அதிக முக்கியத்துவம் தரப்படுவது அவசியமற்றது என்பதே என் கருத்து.

வீரர்களை அரங்கில் உற்சாகப்படுத்த  வெளிநாட்டு அழகிகளை இறக்குமதி செய்ய வேண்டிய அளவிற்கு செல்வது தேவையா?பொதுவாக விளையாட்டு விளையாட்டாகவே இருக்கவேண்டும்.அழகாக சுழலும் சுழல் பந்துவீச்சில் இருக்கும் நளினம் உயிரை பறிக்கும் வேகப்பந்து வீச்சில் உண்டா? தேவையெனில் வேகப்பந்து வீச்சை கிரிக்கெட்டில் தடை செய்வது கூட அவசியம் என்பதே என் கருத்து.

வியாழன், அக்டோபர் 23, 2014

மோடிஜி, நீங்கள் அடுத்து செல்லவேண்டிய இடம்?

மாண்புமிகு பிரதமர் மோடிஜி அவர்களே,
உண்மையில் ஒரு துடிப்பான, செயல்திறம்மிக்க , துணிச்சலான ஒரு பிரதமரான உங்களை காண்பதில்எங்களுக்கு மிக்க பெருமையாக உள்ளது.

வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வர புயலாக புறப்பட்டதும்,காஷ்மீரில் வெள்ள சேதங்களை பார்வையிட்டு எதிர்கட்சிகள் கூட வாயடைதது நிற்குமாறு அதிரடியாக நிவாரணம் அறிவித்ததும்,அதேபோல் ஆந்திர வெள்ளத்தை பார்வையிட்டு நிவாரணம் அறிவித்ததும் ,அதற்கும் மேல் காஷ்மீரில் வெள்ளதால் மக்கள் படும் துயரத்தை கண்டு உங்கள் பிறந்த நாளைக்கூட கொண்டாட மறுத்ததை கண்டும் , அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல் இன்று கூட கடினமான பனிப்பிரதேசமான சியாச்சின் சிகரம் விரைந்து மிக கடினமான சூழ்நிலையில் நம் எல்லையை காக்கும் வீரர்களோடு இணைந்து நின்று தீபாவளி வாழ்த்து தெரிவித்ததை அறிந்தும் மிக்க பெறுமை அடைகிறோம் மோடிஜி.

ஆனால்ஜெய் ஜவான், ஜெய் கிசான்என முழங்கிய  நீங்கள் நேற்று கூட மகாராஷ்டிர மாநிலம் விதர்பாவில் 6 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதை  அறியவில்லையா?சென்ற ஒரு வருடத்தில் சுமார்   3200 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள் என தெரிகிறது.என்னதான் பிரச்சினை விதர்பாவில்? முன்பு கூட செயல்படாத பிரதமரான மன்மோகன் அங்கே சென்று கதறிய விவசாயிகளை கண்டு ஒப்புக்காக ஒன்றுக்கும் உதவாத நிவாரணம் அளித்து தான் செயல்படும் பிரதமராக காட்டிகொண்டார்.எதுவும் அங்கே பயனளிக்கவில்லையே? என்ன காரணம்?

மோடிஜி உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.துடிப்புமிக்க பிரதமரான நீங்கள் சியாச்சின் சிகரத்திலிருந்து உடனே விதர்பா செல்லுங்கள் பிரதமர் அவர்களே,நாட்டை காக்கும் வீரர்களை வாழ்த்திய நீங்கள் இந்த நாட்டிற்க்கு உணவளிக்கும் விவசாயிகளை காக்க ,அவர்கள் பிரச்சினைகளை தீர்க்க உடன் விதர்பா செல்லவேண்டும் என்பதே என் ஆசை.

செவ்வாய், அக்டோபர் 21, 2014

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அன்புள்ள தமிழ்( மண ) உறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், அக்டோபர் 07, 2014

ஜாமீன் மறுப்பு-தற்போதய செய்தி

கர்னாடக உயர்நீதிமன்றம், மு.முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளதாகஅனைத்து செய்தி ஊடகங்களும் செய்தி வெளியிட்ட நிலையில் தற்போதய செய்திகளின்படி ஜாமீன் மறுக்கபட்டதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா- ஜாமீன்

கர்னாடக உயர்நீதிமன்றம், மு.முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளதாக தற்போதய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஞாயிறு, செப்டம்பர் 28, 2014

ஒரு குற்றம்-பல தண்டனை தேவையா?

தமிழக முதல்வருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு சொல்லப்பட்டு,தண்டனைகள் அறிவிக்கப்பட்டு ,இது குறித்து பல விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.இது குறித்து எனது கருத்து.

 தவறு செய்தவர்கள் தண்டனையை எதிர்கொள்ளவேண்டும் என்பது உண்மைதான் எனினும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக பதவி வகிக்கும் ஒருவரை 16 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட வழக்கில் இப்போது சிறையில் அடைப்பது நியாயமா?

ஏனெனில் வருமானத்துக்கு மீறி சொத்து குவித்தது தவறுதான் எனினும் இந்த ஒரு குற்றத்துக்காக தமிழக முதல்வருக்கு எதிராக மூன்றுவகை தண்டனை தேவையற்றது என்பதே என் கருத்து.

சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிப்பு, இதனால் முதல்வர் பதவியும் இழப்பு, 100 கோடி ரூபாய் அபராதம்  . 6(அ) 10 வருடம் தேர்தலில் நிற்க தடை. , இவையே ஒரு அரசியல் தலைவருக்கு மிகப்பெரிய தண்டனைதான்.

இத்தனைக்கும் மேல் 4 வருடம்  சிறை தண்டனைஎன்பது தேவையா?என்பதே என் கேள்வி.

புதன், ஆகஸ்ட் 13, 2014

மீண்டும் நன்றியுடன்.

அம்மா -வுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவிக்க கடமைபட்டுள்ளேன்.ஏற்கெனவே இது பற்றி பதிவிட்டிருந்தேன்.என்றாலும் குறைகளை மீறி நிறைகள் நடைபெறும்போது பாராட்டுவது கடமையே.

கிட்டதட்ட. 4 மாதங்களுக்கு மேலாக கிராமப்பகுதியாகிய எங்கள் பகுதிக்கு தடையற்ற மின்சாரம் கிடைத்துக்கொண்டுள்ளது.இதனால் விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அதிலும் தொடர்ந்து மும்முனை மின்சாரம் கிடைப்பது மிக்க மகிழ்ச்சியே.தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலும் இந்நிலையே காணப்படும் என எண்ணுகிறேன்.

மின்சாரம் இனி பெரும்பாலும் தடைபடாது கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு இப்பதிவின் வாயிலாக மிக்க நன்றியை மீண்டும் தெரிவித்துக்கொள்ள கடமைபட்டுள்ளேன்.

ஞாயிறு, ஆகஸ்ட் 03, 2014

பிரதமருக்கு நன்றியும்,வேண்டுதலும்.

முந்தைய விவசாய விரோதி பிரதமர் மன்மோகன், ஒப்புக்கொண்ட நமது விவசாயிகளை ஒழித்துக்கட்ட அமெரிக்கா நிறைவேற்ற துடிக்கும் உலக வர்த்தக ஏற்பாடு ஒப்பந்தத்தை அமெரிக்க எதிர்ப்பையும் மீறி துணிவுடன் தடுத்து நிறுத்தியமைக்கு நன்றி.
 
அதே சமயம் உங்கள் அரசு, மாநில அரசுகள் விவசாய விளைபொருளுக்கு கூடுதல் விலை வழங்க கூடாது என உத்தரவிட்டுள்ளதாக செய்தி.

மத்திய அரசு வழங்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை கட்டுப்படியானதல்ல என்பது ஊரரிந்த விஷயம். எனவே அனைத்து விவசாய விளைபொருளுக்குமான தற்போதய குறைந்தபட்ச ஆதரவு விலையை (நியாயமான விலை)இரு மடங்காக  உயர்த்தி நீங்கள் வழங்கினால்  மேற்படி உத்தரவு நியாயமே என விவசாயிகள் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளோம். 

ஜெய் ஜவான்,ஜெய் கிசான் என தேர்தலுக்கு முன் நீங்கள் முழங்கிய வார்த்தைகள் எங்கள் செவிகளில் இன்னமும் ஒலித்துகொண்டுள்ளது.அவ்வொலியின் உண்மையான உணர்வோடு உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.  

பல்வேறு இன்னல்கள் எதிர்கொண்டு,  விவசாயிகள் விளைவித்த கரும்பை பெற்றுகொண்ட ஆலைகள் அவற்றுக்கான விலையை வழங்காமல் விவசாயிகளை ஏமாற்றி வருவது நீங்கள் அறியாததல்ல.  விற்ற பொருளுக்கு விலை கேட்டு போராடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளது நியாயமா? நீங்கள் ஆட்சிக்கு வந்து நூறு நாட்கள் நெருங்க உள்ளது.அதற்குள்ளாவது விவசாயிகளின் இந்த நியாயமான கோரிக்கையை அதிரயடியாக நிறைவேற்றி தர பணிவுடன் வேண்டுகிறேன்.

விவசாய கண்காட்சி - 2014

கோயம்புத்தூரில் சமீபத்தில் நடைபெற்ற அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சியில் எடுத்த சில புகைபடங்கள் .


                                         நண்பர்களுடன் உள்ளே செல்லும்போது


                                     

                                          நினைத்த காரியம் முடிந்த களிப்புடன்



                                                                     


                                                                   நண்பர்கள்
                                                   

                                                       நண்பர்களோடு நானும் 

                                                                     

                                                               கண்காட்சியில்