ஞாயிறு, செப்டம்பர் 28, 2014

ஒரு குற்றம்-பல தண்டனை தேவையா?

தமிழக முதல்வருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு சொல்லப்பட்டு,தண்டனைகள் அறிவிக்கப்பட்டு ,இது குறித்து பல விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.இது குறித்து எனது கருத்து.

 தவறு செய்தவர்கள் தண்டனையை எதிர்கொள்ளவேண்டும் என்பது உண்மைதான் எனினும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக பதவி வகிக்கும் ஒருவரை 16 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட வழக்கில் இப்போது சிறையில் அடைப்பது நியாயமா?

ஏனெனில் வருமானத்துக்கு மீறி சொத்து குவித்தது தவறுதான் எனினும் இந்த ஒரு குற்றத்துக்காக தமிழக முதல்வருக்கு எதிராக மூன்றுவகை தண்டனை தேவையற்றது என்பதே என் கருத்து.

சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிப்பு, இதனால் முதல்வர் பதவியும் இழப்பு, 100 கோடி ரூபாய் அபராதம்  . 6(அ) 10 வருடம் தேர்தலில் நிற்க தடை. , இவையே ஒரு அரசியல் தலைவருக்கு மிகப்பெரிய தண்டனைதான்.

இத்தனைக்கும் மேல் 4 வருடம்  சிறை தண்டனைஎன்பது தேவையா?என்பதே என் கேள்வி.