புதன், ஆகஸ்ட் 13, 2014

மீண்டும் நன்றியுடன்.

அம்மா -வுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவிக்க கடமைபட்டுள்ளேன்.ஏற்கெனவே இது பற்றி பதிவிட்டிருந்தேன்.என்றாலும் குறைகளை மீறி நிறைகள் நடைபெறும்போது பாராட்டுவது கடமையே.

கிட்டதட்ட. 4 மாதங்களுக்கு மேலாக கிராமப்பகுதியாகிய எங்கள் பகுதிக்கு தடையற்ற மின்சாரம் கிடைத்துக்கொண்டுள்ளது.இதனால் விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அதிலும் தொடர்ந்து மும்முனை மின்சாரம் கிடைப்பது மிக்க மகிழ்ச்சியே.தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலும் இந்நிலையே காணப்படும் என எண்ணுகிறேன்.

மின்சாரம் இனி பெரும்பாலும் தடைபடாது கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு இப்பதிவின் வாயிலாக மிக்க நன்றியை மீண்டும் தெரிவித்துக்கொள்ள கடமைபட்டுள்ளேன்.

கருத்துகள் இல்லை: