ஞாயிறு, ஜனவரி 18, 2015

மாதங்களில் நான் ”மார்கழி”-3

அதிகாலை எழுந்து சிறுவர் சிறுமியரோடு அவர்களை ஒருங்கினைத்து மாடவீதி வழியே பக்தியுடன் பஜனை பாடிக்கொண்டே ஊர்வலமாக சென்று வந்து கொண்டிருந்த ஓரிரு பெரியோர்களில் மிக முக்கியமான பெரியவர் சில மாதங்களுக்கு முன் இறைவன் திருவடி அடைந்துவிட்டதின் காரணமாகவே அவ்வாறு கேட்டனர்.

  இவ்வளவு நாளாக  நடைபெறும் இந்த ஒரு எளிய பக்தி பஜன் நடைபெறுமா என்ற சந்தேகம் எனக்கும் இருந்தது.ஏனெனில் இன்றைய உலக  நாகரீக மாற்றங்களின் தாக்கங்கள் கிராமங்களையும் விட்டுவைக்கவில்லை.

அதிகாலை 3 மணிக்கு எழுந்து 70 வயதான அந்த பெரியவரை போன்று தன்னலமற்று பக்திவெள்ளத்தில் இணைத்துகொள்ள விரும்பும் இளைஞர்கள்  யாரும் இன்று தயாராக இல்லை என்பதே உண்மை.என்றாலும் அவரின் வயதையொத்த பெரியோர்கள் சிலர் தங்கள் உடல்நலனையும் கருதாது கலந்து கொண்டு இந்த மார்கழி பஜன் என்கிற எளிய பக்திமார்க்கம் இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற காரணமாக அமைந்தது ”கண்ணனின்” திருவருள் அன்றி வேறில்லை.

கருத்துகள் இல்லை: