புதன், ஜூலை 01, 2015

டிஜிட்டல் இந்தியா-பிரதமரின் கனவுத்திட்டம்

இன்றுமாண்புமிகு  பாரத பிரதமர் மோடி தன் அரசின் கனவுத்திட்டமான ’டிஜிட்டல் இந்தியா’திட்டத்தை துவக்கிவைத்தார்.இது நிச்சயம் ஒரு டிஜிட்டல் புரட்சியை இந்தியாவில் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏராளமான பயன்களை உள்ளடக்கியதாக இத்திட்டம் பார்க்கப்படுகிறது.குக்கிராமங்களுக்கும் அதிவேக இணைய இணைப்பு,மாணவர்களுக்கு பாடங்களை டிஜிட்டல் மூலம் வழங்குதல்,அரசு சேவைகள் அனைத்தும் இணையதளம் வாயிலாக வழங்குதல்,அனைத்திற்கும் மேலாக டிஜிட்டல் லாக்கர் மூலம் பொதுமக்களுக்கு அவர்களின் அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல் முறையில் சேமித்து வைத்து தேவையான போது அப்படியே அதனை பயன்படுத்திக்கொள்ளும் வசதி போன்ற எண்ணற்ற வசதிகள் அளிக்கப்பட உள்ளன.
இத்திட்டத்தின் மூலம் எண்ணற்ற வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும் எனவும் தெரிகிறது.நிச்சயம் இது போன்ற திட்டங்களை அனைவரும் பாராட்ட வேண்டும்.
தகவல் தொழில்நுட்ப துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்த பாடுபடும் பிரதமருக்கு பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவிப்போம்.


கருத்துகள் இல்லை: