சனி, ஏப்ரல் 11, 2015

நிதின் கட்கரி-செய்தி

சமீபத்தில் ஒருசெய்தி-
 விவசாயிகள் கலந்து கொண்ட ஒரு கூட்டதில் மாண்புமிகு மத்திய அமைச்சர் நிதின்கட்கரி பேசும்போது  விவசாயிகள் அரசையோ , கடவுளையோ நம்பும் மனநிலையை மாற்றிக்கொள்ளவேண்டும் என பேசியதாக செய்தி.

 கட்கரி-ஜிக்கு ஒரு அன்பான எச்சரிக்கை.விவசாயிகள் அரசாங்கத்தை  நம்பவேண்டாம் என நீங்கள் குறிப்பிட்டது மிக்க பொருத்தம் தான்.ஏனெனில் ’ஜெய்கிசான்’என தேர்தல் நேரத்தில் மேடை தோறும் முழங்கி விவசாயிகளின் ஓட்டை பெற்று ஆட்சிக்கு வந்த நீங்கள் விவசாயிகள் வலி என்ன? பிரச்னைகள் என்ன என ஆராய நேரமில்லாமல் வெளிநாட்டுக்கு பறந்து கொண்டுள்ள பிரதமரை பார்த்தும்,  விவசாய விளைபொருளுக்கு 50% கூடுதல் விலை நிர்ணயிப்போம் என வாக்குறுதி கொடுத்துவிட்டு இது தொடர்பான வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றத்தில் அவ்வாறு அளிக்க இயலாது என சொல்லி விவசாயிகளை ஏமாற்றியும்,யாருக்கோ அடிபணிந்து எப்பாடு பட்டாவது நிலம்கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற துடிக்கும்  உங்களை பற்றி மிக்க பொருத்தமாய்தான் தெரிவித்துள்ளீர்கள் கட்கரிஜி.

ஆனால் உங்களோடு சேர்ந்து கடவுளையும் நம்பவேண்டாம் என தெரிவித்து கடவுளை உங்களோடு ஒப்பிட்டுக்கொண்டதுதான் மிக்க வேதனையாய் உள்ளது .கடவுளாலும் விவசாயிகளை காப்பாற்றமுடியாது என்று சொல்ல வருகிறீர்களா கட்கரிஜி.உங்களுக்கு ஓட்டுப் போட்ட மக்களை நினைத்து வேதனையாய் உள்ளது.
ஒன்று மட்டும் நிச்சயம் இன்னும் நான்கு ஆண்டுகள் கழித்து வர உள்ள தேர்தலின் போது வாக்காளர்களான எங்களையும், கடவுளையும் நம்பும் மன நிலையை மாற்றிக்கொண்டு ஏற்படபோகும் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை இப்பொழுதிருந்தே வளர்த்துகொள்ளுங்கள் கட்கரிஜி.

கருத்துகள் இல்லை: