வியாழன், ஏப்ரல் 23, 2015

இதுதான் எனது இன்றைய இந்தியா

நேற்று  இந்திய தலைநகர் டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக மத்திய அரசின் நிலம் கையகபடுத்தும் சட்டத்திற்கு எதிரான பேரணியில் பங்கற்ற விவசாயி ஒருவர் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் மரத்தில் ஏறி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது மிக்க அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
இதுதான் இந்தியாவில் உள்ள விவசாயிகளின் வேதனையான நிலைமை.

உண்மையான காரணத்தை ஆராயாது இதை எப்படி தங்களுக்கு சாதக பாதகமாக பயன்படுத்திகொள்வது என்பதுதான் அரசியல் கட்சிகளின் தற்போதய சிந்தனையாக உள்ளது.
உண்மையில் விவசாயிகள் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த மோடி அரசு இதுவரை விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு அடியை கூட எடுத்து வைக்கவில்லைஎன்பதுதான்அப்பட்டமானஉண்மை.
ஆனால்விவசாயிகளுக்கு எதிராக நிலம் எடுப்பு சட்டம்,விவசாய கடனுக்கான வட்டியை இருமடங்கு ஆக்குவது,போன்ற விவசாயிகளுக்கு எதிரான செயல்களின் ஈடுபட்டு வருகிறது வேதனையாக உள்ளது.

கருத்துகள் இல்லை: