சனி, ஏப்ரல் 25, 2015

விவசாயிகளின் மதிப்பு

இன்று நாளிதழில் ஒரே பக்கத்தில் வெளியான இரு செய்திகளை பார்ப்போம்
.
செய்தி 1.கால்நடைகள் கடத்தல்-சுப்ரீம் கோர்ட் கவலை.

இந்தியாவிலிருந்து அதிக அளவில் கால்நடைகள் வங்கதேசத்திற்கு கடத்தபடுகின்றன.உணவு தண்ணீர் கொடுக்காமல் பல கி.மீ தூரம் நடத்திசெல்லப்படுகிறது. அதை தடுக்கவேண்டும்.இதனால் இந்தியாவில் கால்நடை எண்ணிக்கை குறையும். குழந்தைகளுக்கு பால் கிடைக்காது எனவே இதை தடுக்கவேண்டும் என தொடரப்பட்ட வழக்கில்சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்தது.

செய்தி 2. மகாராஷ்டிராவில் 3 மாதங்களில் 257 விவசாயிகள் தற்கொலை.

மத்திய அமைச்சர் ராஜ்யசபாவில் பேசும் போது விவசாயிகள் தற்கொலைகள் அதிகரிப்பது கவலை அளிப்பதாகவும் இவ்வருடத்தின் முதல் 3 மாதங்களில் மட்டும் மகாராஷ்டிராவில் 3 மாதங்களில் 257 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் எனவும் விவசாயிகள் தொடர்பான விவகாரம் மாநில அரசுகள் சம்பந்தபட்டது என்றும் அந்த அரசுகள் வழங்கும் இழப்பீட்டில் மத்திய அரசு தலையிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.


அரசோ,அதிகார வர்க்கமோ ,நீதிமன்றங்களோ கூட விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லை. கால்நடைகளுக்கு கிடைக்கும் நீதி கூட விவசாயிகளுக்கு கிடையாது.என்ன செய்வது தற்கொலையை தவிர?

கருத்துகள் இல்லை: